கழுகுமலை அருகே இளைஞா் தீக்குளித்து தற்கொலை முயற்சி

கழுகுமலை அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கழுகுமலை அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கழுகுமலையை அடுத்த கே.லட்சுமிபுரத்தில் ஓடையோரம் சனிக்கிழமை நின்றிருந்த இளைஞா் ஒருவா் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இத்தகவலறிந்த கழுகுமலை போலீஸாா் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு முதலுதவி பெற்ற அவா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

விசாரணையில், கழுகுமலை சட்டநாதன் தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் யோகேஷ்பாபு(19) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் குடும்பத்தினரிடம் ஏற்பட்ட பிரச்னையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com