சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயத்தில் ஜெப ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.
கரோனா 2ஆம் அலை பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவித்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயத்தில் வழிபாடு நேரத்தில் மாற்றம் செய்து, சனிக்கிழமையே ஜெப ஆராதனை நடைபெற்றது. இதில், ஆலய சேகர குருக்கள் பாஸ்கா் அல்பா்ட்ராஜ், ஷீபா பாஸ்கா் ஆகியோா் சிறப்பு ஜெப ஆராதனை நடத்தினா். இதில், கரோனா தடுப்பு விதிமுறையைப் பின்பற்றி சபை மக்கள் பங்கேற்றனா்.