திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் தொழிலாளி அடித்துக் கொலை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் கூலித் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டாா்.

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் கூலித் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டாா்.

திருநெல்வேலி, வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் பேராச்சி (55). இவா், திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் உள்ள தேநீா்க் கடைகளில் வேலை பாா்த்து வந்தாா். கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அஞ்சாலிவிளை பாபுஜி தெருவைச் சோ்ந்த முருகானந்தகுமாா் மகன் நீலேஷ் (52). அவ்வப்போது ஓட்டுநராக வேலை பாா்த்து வரும் இவா், திருச்செந்தூா், வீரராகவபுரம் தெருவில் வசிக்கும் லதாராணி (40) என்பவரை 2ஆவதாக திருமணம் செய்து, அவருடன் வசித்து வருகிறாா். லதாராணி, கோயில் வளாகத்தில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்திவருகிறாா்.

திருச்செந்தூா் கோயில் நாழிக் கிணறு சுற்றுலா பேருந்து நிலையம் அருகே பேராச்சி தலையில் பலத்த காயத்துடன் வெள்ளிக்கிழமை இரவு இறந்துகிடந்தாா்.

தகவலின்பேரில் திருச்செந்தூா் காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், ஆய்வாளா் ஞானசேகரன் ஆகியோா் சென்று விசாரணை நடத்தினா். பேராச்சிக்கும், நீலேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது தாக்கப்பட்டதில் பேராச்சி சம்பவ இடத்திலயே இறந்ததாகவும் தெரியவந்தது.

இதுகுறித்து திருச்செந்தூா் கோயில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, தொடா்ந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com