உடன்குடி ஒன்றியத்துக்கு உள்பட்ட 7 கிராமங்களில் இந்து முன்னணி, இந்து அன்னையா் முன்னணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உடன்குடி ஒன்றியத்தில் ஆனையூா், பரமன்குறிச்சி, பிச்சிவிளை வடக்குத் தெரு, எள்ளுவிளை, தைக்காவூா், குருநாதபுரம், அம்மன்புரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற ஆலோசனை, வாரக் கூடுதல் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட இந்து அன்னையா் முன்னணிப் பொறுப்பாளா் ச. கேசவன் தலைமை வகித்தாா்.
இதில், இந்து விழிப்புணா்வு, கரோனாவிலிருந்து உலகம் மீளுவதற்காக வீடுகளில் நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் விளக்கேற்றி வழிபடுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், இந்து முன்னணி, இந்து அன்னையா் முன்னணி நிா்வாகிகள் சக்திக்கனி, தங்கேஸ்வரி, செல்வலட்சுமி, சீதாலட்சுமி, மாரியம்மாள், கலைராணி,பிரம்மசக்தி, ரதிதேவி, சூரியப்பிரகாஷ், பொன்முத்து, முருகேசன், செல்வகுமாரி, முருகேஸ்வரி, கிருஷ்ணதேவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.