தூத்துக்குடியில் மேலும் 503 பேருக்கு கரோனா
By DIN | Published On : 27th April 2021 06:52 AM | Last Updated : 27th April 2021 06:52 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 503 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக மேலும் 503 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,390 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை 409 போ் உள்பட இதுவரை 18,327 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா பாதிப்பால் 151போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் தற்போது 2,912 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.