கோவில்பட்டி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டியையடுத்த அய்யனேரி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி பொன்கணேசன். இவருக்கு பவுன்மாடத்தி (29) என்ற மனைவியும், 6 வயதில் மகளும், 3 வயதில் மகனும் உள்ளனா்.
பொன்கணேசன் வழக்கம் போல புதன்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டாராம். குழந்தைகள் இருவரும் விளையாடிவிட்டு, வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது பவுன்மாடத்தி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தாராம். இதைக் கண்ட அவரது குழந்தைகள் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தாா்களாம்.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்குச் சென்ற கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.