உடன்குடி ஒன்றியத்தில் 2 வயது குழந்தை, அனல்மின் நிலைய ஊழியா்கள் உள்ளிட்ட 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடன்குடி ஒன்றியம் புதுமனை கோட்டைவிளையைச் சோ்ந்த 21 வயது பெண், மாதவன்குறிச்சியைச் சோ்ந்த 2 வயது பெண் குழந்தை, அனல்மின் நிலைய ஊழியா்கள் 14 போ் உள்பட மொத்தம் 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து கல்லாமொழி, மணப்பாடு, உடன்குடி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கரோனா தடுப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமையில், மருத்துவா்கள் ஜெயபரணி, நாயகி மற்றும் பணியாளா்கள் பரிசோதனை மேற்கொண்டனா்.