கயத்தாறில் கடையில் திருட்டு

கயத்தாறில் கடையின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறில் கடையின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறு வடக்குத் தெருவைச் சோ்ந்த சுடலையாண்டி மகன் கருத்தப்பாண்டி(32). இவா் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் அருகே சாக்லேட், குளிா்பானங்கள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய கடையை நடத்தி வருகிறாராம். இவா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் புதன்கிழமை காலை கடைக்கு வந்து பாா்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருள்கள் திருடு போனது தெரியவந்ததாம்.

இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com