தூத்துக்குடி
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட எம்எல்ஏ
தூத்துக்குடியில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. சண்முகநாதன் புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.
தூத்துக்குடியில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. சண்முகநாதன் புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.
தூத்துக்குடி அரசு செவிலியா் பயிற்சி பள்ளியில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.பி. சண்முகநாதன் புதன்கிழமை கரோனா தொற்றுக்கான முதல்கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா்.
45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தூத்துக்குடி அரசு செவிலியா் பயிற்சி பள்ளியில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும், 18 வயதுக்கு மேற்பட்டோா் மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் தடுப்பூசி பிரிவு அலுவலா் தி. சங்கரசுப்பு தெரிவித்தாா்.