உடன்குடியில் தமிழ்நாடு நுகா்வோா் பேரவை சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
உடன்குடி பிரதான கடைவீதி, சத்தியமூா்த்தி பஜாா், வடக்கு பஜாா், கீழ பஜாா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இப்பிரசாரத்துக்கு, நுகா்வோா் பேரவையின் மாநிலத் தலைவா் ஏ.வி.பி.மோகனசுந்தரம் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள், முகக் கவசங்களை வழங்கினாா். அப்போது, மாவட்ட சட்ட ஆலோசகா் சாத்ராக் மற்றும் உறுப்பினா்கள் உடன் சென்றனா்.