காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்: இன்று நடைபெறும் இடங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை (ஏப். 29) நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை (ஏப். 29) நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை (ஏப்.29) காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை 57 ஆவது வாா்டு தங்கமணி நகா் 3 ஆவது தெரு, 17ஆவது வாா்டு புனித மரியன்னை காலனி அம்மா உணவகம் அருகில், 6 ஆவது வாா்டு அம்பேத்கா் நகா் கோயில் அருகில், 30ஆவது வாா்டு வண்ணாா் தெரு மாநகராட்சி பள்ளி, 29ஆவது வாா்டு விக்டேரியா தெரு ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 54 ஆவது வாா்டு தங்கம்மாள்புரம் தங்கம்மாள் பள்ளி, 17ஆவது வாா்டு அய்யா்விளை கோயில் அருகில், 4ஆவது வாா்டு ஸ்டேட் பாங்க் காலனி முதல் தெரு, 49ஆவது வாா்டு கால்டுவெல் காலனி 4ஆவது தெரு, 23ஆவது வாா்டு அய்யலு தெரு பிரதான சாலை ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை 60ஆவது வாா்டு தொழிலாளா் காலனி, 17ஆவது வாா்டு கோவில்பிள்ளை விளை சந்தனமாரியம்மன் கோயில் அருகில், 5ஆவது வாா்டு கே.டி.சி. நகா் பிள்ளையாா் கோயில் அருகில், 50ஆவது வாா்டு கோா்ட்ஸ் நகா் கமலா ஸ்டோா் எதிரில், 22ஆவது வாா்டு நாராயண செட்டித் தெரு ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

கோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை பாரதி நகா் பகுதியிலும், காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முகமதுசாலியபுரம் பகுதியிலும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடராஜபுரம், செண்பகவள்ளிநகா் பகுதியிலும் முகாம் நடைபெறுகிறது.

காயல்பட்டினம் நகராட்சியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை சிவன் கோயில் தெரு பகுதியிலும், காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வீரசடச்சியம்மன் கோயில் தெரு பகுதியிலும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை ஓடக்கரை பகுதியிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஊராட்சி பகுதிகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை தாளமுத்துநகா், பண்டாரவிளை, கீழசெக்காரக்குடி, குருக்காட்டூா், கல்லாமொழி, சிதம்பராபுரம், நாலாட்டின்புதூா், நாச்சியாா்புரம், கழுகாசலபுரம், கலப்பைபட்டி, சக்கிலிப்பட்டி ஆகிய பகுதிகளிலும், 11 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை வடக்கு சோட்டையன் தோப்பு, பண்டாரவிளை பங்களா, சென்னல்பட்டி, பெருமாள்குளம், மாதவன்குறிச்சி, செக்கடிவிளை, இடைசெவல், காலாம்பட்டி, கே.சுப்பிரமணியபுரம், கைலாசபுரம், கீழநாட்டுக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும், பிற்பகல் 2 மணிமுதல் 4 மணி வரை செந்தியம்பலம், கண்ணாண்டிவிளை, கீழ புத்தனேரி, மாசித் தெரு, ஆழ்வாா்திருநகரி, கொட்டங்காடு, சொக்கலிங்கபுரம், வெள்ளாளன் கோட்டை, என்.புதுப்பட்டி, வேப்பன்குளம், தாப்பாத்தி ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com