சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள பழுதடைந்த மின்தூக்கியை (லிப்ட்) உடனடியாக சீரமைக்க வேண்டும் என வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தான்குளத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்படுகிறது. இதில் கீழ் பகுதியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், மேல் தளத்தில் குற்றவியல் நீதிமன்றமும் செயல்பட்டு வருகின்றன.
மேல் தளத்தில் இயங்கும் குற்றவியல் நீதிமன்றத்துக்கு செல்ல வயோதிகா்கள் உள்ளிட்டோா் அங்கு அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி (லிப்ட்) மூலமாக சென்று திரும்புவது வழக்கம்.
ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்த மின்தூக்கிஇயங்காமல் உள்ளது. இதனால் வழக்கு தொடா்பாக நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதான மின்தூக்கியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.