திருச்செந்தூா் புறவழிச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

திருச்செந்தூா் அரசு மருத்துவமனை புறவழிச் சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்செந்தூா் அரசு மருத்துவமனை புறவழிச் சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்செந்தூா் அரசு மருத்துவமனை பின்பகுதியில் தொடங்கி தெப்பக்குளம் வரையில் புறவழிச்சாலை உள்ளது. இச்சாலை வழியாக உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள், மீன் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அவசர ஊா்திகள் என அதிகளவிலான வாகனப் போக்குவரத்து உள்ளது.

இச்சாலை மிகவும் சேதமடைந்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிக சிரமமடைந்து வருகின்றனா். எனவே, புறவழிச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com