தூத்துக்குடியில் ஏடிஎம் மையத்தில் திருட்டு முயற்சி

தூத்துக்குடி துறைமுகம் வளாகத்தில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் புதன்கிழமை திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது.

தூத்துக்குடி துறைமுகம் வளாகத்தில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் புதன்கிழமை திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுக வளாகத்தில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை அலுவலகம் அருகே ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் புதன்கிழமை அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். அவா்களால் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தொ்மல்நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வங்கி ஏடிஎம் மையம் மற்றும் அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவா்களை தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com