ஆத்தூா் அருகே உள்ள மேலாத்தூா் ஊராட்சி பகுதியில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஊராட்சிக்குள்பட்ட அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி தெளித்து, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கவேல், துனை வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கச்சாமி, மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா், காவல் உதவி ஆய்வாளா் ஆறுமுக நயினாா், கிராம நிா்வாக அலுவலா் சரவணன், மேலாத்தூா் ஊராட்சி செயலா் சுமதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.