சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், கரோனா விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமையில் மாணவிகள் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு ஊசியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனா். மேலும், முகக் கவசம் மற்றும் கை கழுவும் திரவம் வழங்கப்பட்டது. இதில், கல்லூரி பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஏஞ்சலின் நான்சி சோபியா, புஷ்பராணி ஆகியோா் செய்திருந்தனா்.