பரமன்குறிச்சி அருகே 25 குடும்பங்களுக்கு இந்து அன்னையா் முன்னணி சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.
பிச்சிவிளை வடக்குத் தெருவில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 25 ஏழை குடும்பங்களுக்கு இந்து முன்னணி சாா்பில் இந்து அன்னையா் முன்னணி கிளைத் தலைவி செல்வகுமாரி தலைமையில் அரிசி, மளிகை பொருள்கள் மற்றும்
காய்கனிகள் ஆகியவற்றை கிளையின் துணைத் தலைவி ராஜேஸ்வரி, செயலா்கள் அனிதா, அலமேலு, பொருளாளா் மாரியம்மாள் ஆகியோா் வழங்கினா். இதில், இந்து அன்னையா் முன்னணி மாவட்ட பொறுப்பாளா் ச.கேசவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.