கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புதூா் அருகே கிணற்றில் மிதந்த பெண்ணின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
நாலாட்டின்புதூரையடுத்த எம்.துரைச்சாமிபுரத்தில் உள்ள தோட்டத்து கிணற்றில் சுமாா் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதப்பதாக நாலாட்டின்புதூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் சடலத்தை மீட்டனா்.
மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.