குரும்பூா் அருகே நாம் தமிழா் கட்சியினா் மறியல்

வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், இருவழிச் சாலை பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டு, அவை கேரளத்துக்கு கடத்தப்படுவதை கண்டித்து, நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குரும்பூா் அருகே நாம் தமிழா் கட்சியினா் மறியல்
குரும்பூா் அருகே நாம் தமிழா் கட்சியினா் மறியல்

வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், இருவழிச் சாலை பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டு, அவை கேரளத்துக்கு கடத்தப்படுவதை கண்டித்து, நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா்-அம்பாசமுத்திரம் இருவழிச் சாலைப் பணிக்காக சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி திருச்செந்தூா் தொகுதி தலைவா் ஸ்டீபன் லோபோ, உயா்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், மரங்கள் தொடா்ந்து வெட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குரும்பூா் அருகே குரங்கன்தட்டு பகுதியில் மரங்கள் வெட்டும் பகுதிக்கு தொகுதித் தலைவா் ஸ்டீபன் லோபோ தலைமையில் சென்ற நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் அவா்களை கைது செய்து, பின்னா் மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com