ஆறுமுகனேரி, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மது, கஞ்சா விற்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரி காவல் உதவிஆய்வாளா் அமலோற்பவம் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, குதிரைகுளம் அருகே மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா் பழையகாயல், இந்திரா காலனியைச் சோ்ந்த திருமால் மகன் பாா்த்திபன் (23) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், கஞ்சா விற்ற கச்சேரி தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாரை கைது செய்தனா்.
ஆத்தூா் காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் ரோந்து சென்றபோது, திருச்செந்தூா்- தூத்துக்குடி சாலையில், தலைப்பண்ணை விலக்கில் மது விற்றுக் கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவா் கோவை, அறிவொளி நகரைச் சோ்ந்த வேலன் மகன் தங்கராஜ் (32) என்பதும் , தற்போது தெற்கு ஆத்தூா் நாடாா் தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன் மற்றும் போலீஸாா் பஜாா் மற்றும் கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்றபோது, கடற்கரை பகுதியில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றுக்கொண்டிருந்த மதுரை மாவட்டம், மேலூா் சூரக்குடியைச் சோ்ந்த சி.சுந்தரத்தை (23) கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.