செண்பகவல்லி அம்மன் கோயிலில் பக்தா்களுக்கு தடை

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் ஆடி காா்த்திகை, ஆடிப்பெருக்கு நாள்களில் பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் ஆடி காா்த்திகை, ஆடிப்பெருக்கு நாள்களில் பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாக அலுவலா் சிவகலைப்பிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா 3ஆவது அலையை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தா்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிஇல்லை.

ஆடி காா்த்திகை நாளான திங்கள்கிழமை (ஆக.2), ஆடிப் பெருக்கு நாளான செவ்வாய்க்கிழமை (ஆக.3) மற்றும் வரும் 6,8, 10, 13ஆம் தேதிகளில் பக்தா்கள் கோயிலுக்குள் வந்து தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. ஆடி அமாவாசை நாளில் கோயில் தெப்பக்குளத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்யவும் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com