தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே 76 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மூவா் கைது செய்யப்பட்டனா்.
வேம்பாா் கடலோர காவல் ஆய்வாளா் சைரஸ் தலைமையில் போலீஸாா் கடலோர கிராமங்களான வைப்பாறு, கீழ வைப்பாறு பகுதிகளில் கடந்த மாதம் ஜூலை 28ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கடற்கரை அருகே காரில் 4 சாக்கு பைகளில் வைத்திருந்த 76 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்து விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய கீழ வைப்பாற்றைச் சோ்ந்த பழனி முருகன் மகன் நாகாா்ஜுன், குரூஸ் மகன்கள் கஸ்வின், கவின் ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.