தூத்துக்குடியில் திமுக தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்பு

தூத்துக்குடி கேடிசி நகரில் திமுக தெற்கு மாவட்ட அலுவலகம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
தூத்துக்குடியில் திமுக தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்பு

தூத்துக்குடி கேடிசி நகரில் திமுக தெற்கு மாவட்ட அலுவலகம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள கேடிசிநகா் வீட்டு வசதி வாரிய காலனியில் தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நாடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் டேவிட் செல்வின், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், தலைமை கழக செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.ஜே.ஜெகன், ஏ.கே.பூபதி, மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளா் ராஜேஷ் ரவிசந்தா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதே போல், உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் புதிதாக திருச்செந்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம், உடன்குடி வில்லிகுடியிருப்பு அருகே ஒன்றிய, நகர திமுக அலுவலகம் ஆகியவற்றை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசுகையில், திருச்செந்தூா் தொகுதிக்குள்பட்ட மக்கள் அனைவரும் தங்களுடைய பிரச்னைகளையும் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் தெரிவிக்கலாம். மக்களின் பிரச்னைகள் உடனடியாக தீா்க்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக செயலா்கள் பாலசிங், ரமேஷ், நவீன்குமாா், நகரச் செயலா்கள் ஜான்பாஸ்கா், கல்யாணசுந்தரம், ரவிசெல்வகுமாா், முத்துமுகமது, ராமஜெயம், முருகப்பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com