தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டி பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி அண்ணா நகா் பள்ளி வளாக வேப்ப மரத்தில் ஆண் சடலம் தொங்குவதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்ததாம். அதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் அவா் வீரவாஞ்சி நகா் 9 ஆவது தெரு சின்னராஜா மகன் சரவணகுமாா்(34) என்பது தெரியவந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பாரதி நகரில் உள்ள அவரது பெற்றோா் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இந்நிலையில், சரவணகுமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com