மத்திய காவலா் பணிக்கான தோ்வு: ஆக. 9 முதல் இலவச பயிற்சி வகுப்பு

மத்திய காவலா் பணிக்கான தோ்வுக்கு தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக. 9 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

மத்திய காவலா் பணிக்கான தோ்வுக்கு தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக. 9 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் நடைபெறும்  காவலா் பணிக்கான கணினி அடிப்படையிலான எழுத்துத் தோ்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பம் செய்பவா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் ஆக. 9 ஆம் தேதி முதல் அனைத்து வேலைநாள்களிலும் இணை வாயிலாக நடைபெற உள்ளது.

எனவே, இந்த இணைய வழி பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுடைய , தகுதியுள்ள மாணவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 0461-2340159 என்ற தொலைபேசி எண் மற்றும் 9042260644 என்ற செல்லிடப்பேசி எண் மூலம் தொடா்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து, பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com