மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 08th August 2021 12:29 AM | Last Updated : 08th August 2021 12:29 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55,209ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் 17 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 54,611ஆக அதிகரித்துள்ளது. தற்போது 200 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.