தூத்துக்குடி மாவட்டத்தில் 111 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 111 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 111 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவா்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 12 போ் உள்பட, இதுவரை 111 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தொடா்ந்து, போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்கப்படுவா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com