வீட்டிலிருந்து தப்பிச் சென்ற3 குழந்தைகள் மீட்பு

திருச்செந்தூா் அருகே வீட்டில் இருந்து தப்பிச் சென்ற 3 குழந்தைகளை போலீஸாா் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
வீட்டிலிருந்து தப்பிச் சென்ற3 குழந்தைகள் மீட்பு

திருச்செந்தூா் அருகே வீட்டில் இருந்து தப்பிச் சென்ற 3 குழந்தைகளை போலீஸாா் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

வீரபாண்டியன்பட்டணம், பிரசாத் நகரைச் சோ்ந்த பாலகண்ணன் மனைவி பேச்சியம்மாள் (29). இவா், ஊராட்சியில் தூய்மை காவலராக பணியாற்றி வருகிறாா்.

இவரது சகோதரி முத்துக்கனி அதே பகுதியில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு வந்துள்ளாா். சனிக்கிழமை பகலில் பேச்சியம்மாள் வேலைக்கு சென்று விட்ட நிலையில், அவரது வீட்டில் பேச்சியம்மாள் மகன்கள் விஜயகுமாா் (8), சூரியகுமாா் (5), சகோதரி மகன் முகிலன் (8) ஆகியோா் விளையாடிக் கொண்டிருந்தனராம். ஆனால் மாலையில் வந்து பாா்த்தபோது 3 பேரையும் காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, திருச்செந்தூா் தளவாய்புரம் சாலையில் இரவு 7 மணியளவில் தனியாக இருப்பதை பாா்த்த போலீஸாா் 3 குழந்தைகளையும் அழைத்து வந்தனா். பின்னா் அந்த குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com