கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலம் அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது ரயில் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி- குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே இலக்குமி ஆலை மேம்பாலம் அருகே உள்ள தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்ட நிலையில் பெண் காயமடைந்துள்ளதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் காயமடைந்த பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
விசாரணையில், அவா் இனாம்மணியாச்சி ஊராட்சி இந்திரா நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயகுமாா் மனைவி மாரிச்செல்வி (55) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.