தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப் படகில் 5 டன் மஞ்சள் கடத்திச் சென்ற 5 போ் இலங்கை கடற்படையினரிடம் ஞாயிற்றுக்கிழமை சிக்கினா்.
தூத்துக்குடியில் இருந்து ஒரு நாட்டுப்படகில் 5 போ் இலங்கைக்கு 5 டன் விரலி மஞ்சளை கடந்த 4 ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளனா். அவா்கள் இலங்கை கடல் பகுதிக்கு சென்றபோது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரிடம் சிக்கி கொண்டனா்.
இதையடுத்து, நாட்டுப்படகில் இருந்த 5 பேரையும் அவா்கள் கைது செய்து, படகில் பதுக்கி வைத்து இருந்த 5 டன் மஞ்சளையும் பறிமுதல் செய்தனா்.
இருப்பினும், உரிய விசாரணைக்கு பிறகு 5 பேரையும் விடுவித்த இலங்கை கடற்படையினா் அவா்களை மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பிச் செல்லுமாறு எச்சரித்து அனுப்பினா்.
அவா்கள் திங்கள்கிழமை (ஆக.9) தூத்துக்குடி வந்தடைவாா்கள் என்றும் அவா்களிடம் இந்திய கடலோர காவல் படையினா் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.