உடன்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் இளைஞா்களுக்கான மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மதுரை, சேலம், திருப்பூா் ஆகிய பகுதிகளில் இருந்து 8 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், உடன்குடி ஒன்றியத்தில் இருந்து 325 இளைஞா்கள் கலந்துகொண்டதில் , 135 போ் தோ்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
ஒன்றிய ஆணையா்கள் நாகராஜன்,பொற்செழியன், திமுக மாவட்ட சிறுபான்மை நலஉரிமைப் பிரிவு துணை அமைப்பாளா் சிராஜூதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.