சாத்தான்குளம் வண்டிபேட்டை ஸ்ரீசுடலைமாடசுவாமி கோயில் கொடை விழாவில் 108 திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கொடை விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி குடியழைப்பு, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை,
உச்சிகால பூஜை, சுவாமி மஞ்சள் நீராடுதல், சுவாமி தீச்சட்டி ஏந்தி வீதி உலா வருதல், சாமக்கொடை உள்ளிட்டவை
நடைபெற்றது. சனிக்கிழமை (ஆக.14) சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, சுவாமிக்கு வேண்டுதல் கிடா வெட்டி சிறப்பு அன்னதானம், உணவு எடுத்தல் உள்ளிட்டவை நடைபெறுகிறது.