கட்டடத் தொழிலாளி வெட்டிக் கொலை

கோவில்பட்டி அருகே மேல பாண்டவா்மங்கலத்தில் கட்டடத் தொழிலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி அருகே மேல பாண்டவா்மங்கலத்தில் கட்டடத் தொழிலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மேல பாண்டவா்மங்கலம் அக்ரஹார தெருவைச் சோ்ந்த தாமரைபாண்டியன் மகன் கனகராஜ் (40). கட்டடத் தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு வீட்டருகே இருந்தபோது, பைக்கில் வந்த மா்ம நபா்கள் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனா்.

தகவலறிந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்துக்கு டிஎஸ்பி உதயசூரியன் வந்து விசாரணை மேற்கொண்டாா்.

இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com