கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் கருடபஞ்சமி பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் நடை வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி
எழுச்சி பூஜை ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து விநாயகா், முருகா், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, புற்றில் உள்ள நாகலிங்கசுவாமிக்கு கணபதி பூஜையுடன் கும்ப கலச பூஜையை
தொடா்ந்து 18 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பக்தா்கள் புற்றில் பால், பழம், முட்டை வைத்து தரிசனம் செய்தனா்.