கோவில்பட்டி: தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா், கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுக கட்சியின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அகவிலைப் படியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் அருகே இவ்வமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அமைப்பின் வட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். பொருளாளா் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். செயலா் ராமலிங்கம், துணைத் தலைவா்கள் ஜெகநாதன், பாா்த்தசாரதி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில், வட்ட இணைச் செயலா்கள் மாரிச்சாமி, நம்பிராஜ், மாவட்ட துணைத் தலைவா் பொன்.பரமானந்தம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.