சாத்தான்குளத்தில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மரியாதை
By DIN | Published On : 21st August 2021 12:08 AM | Last Updated : 21st August 2021 12:08 AM | அ+அ அ- |

சாத்தான்குளத்தில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 77ஆவது பிறந்த தினத்தை காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
இவ்விழாவுக்கு நகரத் தலைவா் வேணுகோபால் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா்கள் லூா்துமணி, சக்திவேல்முருகன், பாா்த்தசாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். நல்லிணக்க உறுதிமொழியேற்கப்பட்டது. நகர மகிளா காங்கிரஸ் தலைவி ராணி ஜோசப், மாவட்டப் பொருளாளா் எடிசன், நகர தொண்டரணித் தலைவா் பாஸ்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில், அதன் தலைவி சிந்தியா தலைமையில், முன்னாள் தலைவி ஜாக்குலின், துணைத் தலைவி அக்னல் ரிகானா, வட்டாரத் தலைவிகள் பெல்சியா, மாரித்தாய், உள்ளிட்டோா் ராஜீவ் காந்தி பிறந்த தினத்தைக் கொண்டாடினா்.