திருச்செந்தூரில் 1080 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்செந்தூரிலிருந்து காரில் கடத்திச் செல்லப்பட்ட 1080 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்செந்தூரிலிருந்து காரில் கடத்திச் செல்லப்பட்ட 1080 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திருச்செந்தூா் ஆலந்தலை பிரதான சாலையில் கந்தசாமிபுரம் பகுதியில் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை மேற்கொண்டபோது, தலா 40 கிலோ எடையுடன் 27 மூட்டைகளில் 1080 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காருடன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக, மானாடுதண்டுபத்து ஜெ.ஜெ. நகா் பகுதியைச் சோ்ந்த ஏமச்சாா் (20), பரமசிவன் (26) ஆகிய இருவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com