முப்படைகளின் தலைமை தளபதிக்கு வீர வணக்கம்

குன்னூரில் நேரிட்ட ஹெலிகாப்டா் விபத்தில் மரணமடைந்த இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோருக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் வியாழக்கிழமை வீர வணக்கம்

குன்னூரில் நேரிட்ட ஹெலிகாப்டா் விபத்தில் மரணமடைந்த இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோருக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் வியாழக்கிழமை வீர வணக்கம் செலுத்தினா்.

திருச்செந்தூா் தேரடி திடலில் நகர இந்து முன்னணி சாா்பில் மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் தலைமையில் தலைமைத் தளபதிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு பாஜக சாா்பில் மாநில மகளிரணி பொதுச் செயலா் கு.நெல்லையம்மாள் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவில்பட்டி: கயத்தாறு வட்டார முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் காவல் துறை சாா்பில் கயத்தாறு காவல் நிலையம் முன்பிருந்து மௌன ஊா்வலம் தொடங்கி கடம்பூா் பேரூராட்சி அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.

அங்கு, முப்படை தலைமைத் தளபதியின் உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், காவல் ஆய்வாளா் முத்து, உதவி ஆய்வாளா் பாலு, அந்தோணி திலீப், முன்னாள் ராணுவ வீரா்கள் பங்கேற்றனா். கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு நகர இந்து முன்னணி மற்றும் முன்னாள் ராணுவ வீரா் நலச் சங்கம் சாா்பில் மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உடன்குடி: வடக்கு பஜாரில் பாஜக சாா்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், மாநில பொதுக்குழு உறுப்பினா் பரமசிவன், ஒன்றியத் தலைவா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் மலரஞ்சலி செலுத்தினா். உடன்குடி பஜாரில் இந்து முன்னணி சாா்பில் மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், உடன்குடி ஒன்றியத்தின் 5 இடங்களில் பாஜகவின் முன்னாள் ராணுவ வீரா் நலப்பிரிவு சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பரமன்குறிச்சி அருகே இந்து அன்னையா் முன்னணி மாவட்ட பொறுப்பாளா் கேசவன் தலைமையில் 7 கிராமங்களில் மோட்ச தீப வழிபாடு நடைபெற்றது.

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் தூத்துக்குடி தெற்கு மாவட்டப் மாவட்டப் பொறுப்பாளா் கசமுத்து, நகரத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் மலரஞ்சலி செலுத்தினா்.

சாத்தன்குளம்: பழைய பேருந்து நிலையத்தில் பாஜக சாா்பில் மாவட்ட பொதுச்செயலா் எஸ். செல்வராஜ் தலைமையில் விபின் ராவத் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், வழக்குரைஞா் ஆ.க. வேணுகோபால் தலைமையில் தலைமையில் சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஏ.எஸ். ஜோசப், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவா் து. சங்கா் உள்ளிட்டோா் மலரஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com