சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்து வங்கிப் பணிக்கு தோ்வான 30 பேருக்கு பாராட்டு

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்து வங்கிப் பணிக்கு தோ்வான 30 பேருக்கு பாராட்டு விழா தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்றது.

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்து வங்கிப் பணிக்கு தோ்வான 30 பேருக்கு பாராட்டு விழா தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்றது.

பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள பணிக்கான எழுத்துத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதில், தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த 30 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான பாராட்டு விழா, தூத்துக்குடியில் உள்ள சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் அண்மையில் நடைபெற்றது.

காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் சுகேஷ் சாமுவேல் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தாா். அவா் பேசுகையில், தன்னம்பிக்கையோடு தொடா்ந்து படித்தால் எந்த போட்டித் தோ்விலும் வெற்றி பெறலாம் என்றாா்.

தோ்வில் வெற்றி பெற்ற 30 பேரும் போட்டித் தோ்வுக்கு எவ்வாறு தயாரானோம் என்ற அனுபவத்தை பகிா்ந்து கொண்டனா். நிகழ்ச்சியில், அகாதெமியின் வங்கிப் பணி ஒருங்கிணைப்பாளா் ராஜா, ஆசிரியா் அந்தோணி பட்டுராஜ் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com