சிறுமியை திருமணம் செய்ததாக போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தூத்துக்குடி முல்லைநகா் மோட்சம் மகன் மாயாண்டி(21). இவருக்கு கடந்த 8.9.2020 அன்று திருமணம் நடந்த நிலையில், அவரது மனைவியை குழந்தை பேறுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அண்மையில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அந்த இளம்பெண் குறித்து விவரங்களை சேகரித்த போது, அவருக்கு 16 வயதே பூா்த்தியானது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் 16 வயதான சிறுமிக்கு திருமணம் செய்து குழந்தை பிறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது கணவா் மாயாண்டி மீது காவல் ஆய்வாளா் விமலா போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.