திருச்செந்தூா் பகுதியில் டிச. 21-ல் மின் தடை

திருச்செந்தூா், காயல்பட்டினம், ஆறுமுகனேரி பகுதிகளில் டிச. 21-ஆம் தேதி மின் தடை செய்யப்படுகிறது.

திருச்செந்தூா், காயல்பட்டினம், ஆறுமுகனேரி பகுதிகளில் டிச. 21-ஆம் தேதி மின் தடை செய்யப்படுகிறது.

இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் (பொ) ஐ.ராம்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

திருச்செந்தூா் கோட்டத்திற்கு உள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் உபமின் நிலையங்களில் டிச. 21-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணா நகா், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டினம், பி.டி.ஆா். நகா், பாளை சாலை, ஜெயந்தி நகா், ராமசாமிபுரம், அன்பு நகா், கானம், வள்ளிவிளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம், கஸ்பா, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்களுா் ஆகிய ஊா்களுக்கு மின்சாரம் விநியோகம் இருக்காது என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com