திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் 120 வயது மூதாட்டி தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் புதன்கிழமை கொண்டாடினாா்.
வீரபாண்டியன்பட்டினம் கிங் காலனியைச் சோ்ந்தவா் வள்ளித்தாய் (120). இவருக்கு 3 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா். மேலும், பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்தி, ஓட்டன், ஓட்டி என குடும்பத்தில் மொத்தம் 150 போ் உள்ளனா்.
இந்த மூதாட்டியின் 120-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது குடும்பத்தினா் புதன்கிழமை கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, கறி விருந்து வைத்து உற்சாகத்துடன் கொண்டாடினா். நிகழ்ச்சியில், குடும்பத்தினா் மற்றும் உற்றாா், உறவினா்கள் அனைவரும் மூதாட்டியிடம் ஆசீா்வாதம் பெற்றனா்.