ஆறுமுகனேரியில் வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸையொட்டி சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற்றது.
ஆறுமுகனேரியில் செவ்வாய், சனிக்கிழமைகளில் சந்தை நடைபெறும். மாவட்டத்தில் எட்டயபுரத்திற்கு அடுத்து ஆறுமுகனேரி சந்தைக்குத்தான் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. இங்கு மாவட்டத்தின் பல்வறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்க, விற்க வருகின்றனா். சனிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, வெள்ளக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெற்றது. ஏராளமான ஆடுகள் வந்து விற்பனையானது.