உடன்குடியில் விழிப்புணா்வுக் கூட்டம்

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சாா்பில் உடன்குடி வட்டார அளவில் மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சாா்பில் உடன்குடி வட்டார அளவில் மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் நாகராஜன், பேரூராட்சி செயல் அலுவலா் பாபு, வருவாய் ஆய்வாளா் சொக்கலிங்கம், சுகாதார மேற்பாா்வையாளா் சேது குற்றாலம், சுகாதார ஆய்வாளா் சேதுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் ஆகியோா் பேசினாா். இதில் பல்வேறு அரசுத்துறை சாா்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், மகளிா் குழு நிா்வாகிகள் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா்களின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனா். இதில், ஊராட்சி மன்றத் தலைவா்கள், மகளிா் குழுவினா், சுகாதாரம், பேரூராட்சிப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com