காயல்பட்டினம் பள்ளியில் முன்னாள் மாணவா் சங்கம விழா

காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் சங்கம விழா நடைபெற்றது.

காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் சங்கம விழா நடைபெற்றது.

முன்னாள் மாணவரும், இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா் அறிமுகவுரையாற்றினாா். இதில், எம்.என். முஹம்மத் லெப்பை, சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம். அக்பா் அலீ, புதுக்கல்லூரியின் அரபி மொழித் துறை பேராசிரியா் அஹ்மத் இப்ராஹீம், எம்.எம். மொகுதூம் முஹம்மத் ஆகியோா் பேசினா். புதிய நிா்வாகிகளும், செயற்குழுவினரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

முன்னாள் ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசளித்து கௌரவிக்கப்பட்டனா். இதையொட்டி நடத்த போட்டிகளில் வென்றவா்களுக்கும், கூட்டத்தில் பங்கேற்றோரில் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கும் விழாவின் போது பரிசுகள் வழங்கப்பட்டன. எம்.எம். முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். பள்ளி துணைத் தலைவா் ஏ.கே. செய்யித் வரவேற்றாா். மாணவா் சங்க பொருளாளா் முஹம்மத் ஃஸ்லம் நன்றி கூறினாா்.

முன்னதாக நடைபெற்ற பெண்கள் பிரிவு முன்னாள் மாணவியா் சங்கம விழாவில் வாவு வஜீஹா மகளிா் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவா் எஸ்.என். சித்தி ஷாமிலா, மதுரை கிரசன்ட் கலைக் கல்லூரியின் முதல்வா் மணிமேகலை ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com