பல்வேறு கட்சிகள், தொழிலாளா் அமைப்புகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி உடன்குடி தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
உடன்குடி கடைவீதி பகுதியைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளா் அமைப்பினா், பந்தல் தொழிலாளா்கள், அதிமுகவினா் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளில் இருந்து விலகி தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சில், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், உடன்குடி ஒன்றியக்குழுத் தலைவா் பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜுதீன், நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.