கோவில்பட்டியையடுத்த சிவனனைந்தபுரம் பள்ளியில் நடைபெற்ற தென்மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் தூத்துக்குடி அணி முதலிடம் பெற்றது.
கோவில்பட்டி கால்பந்து கழகத்தின் சாா்பில் 16 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான ஐவா் கால்பந்து போட்டி சிவனனைந்தபுரம் ஸ்ரீகரா சிபிஎஸ்இ பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 8 அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் தூத்துக்குடி கால்பந்து அணியும், கோவில்பட்டி கால்பந்து கழக அணியும் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது.
முன்னதாக நடைபெற்ற 3-ஆம் பரிசுக்கான போட்டியில் விளாத்திகுளம் அணியை கோவில்பட்டி கால்பந்து கழக பி அணி வென்றது.
பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கால்பந்து கழகச் செயலா் தேன்ராஜா தலைமை வகித்தாா். உறுப்பினா் முகமது சாலிக் முன்னிலை வகித்தாா். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஸ்ரீகரா சிபிஎஸ்இ பள்ளி தலைவா் செந்தில்குமாா் பரிசு வழங்கினாா்.
கோவில்பட்டி கால்பந்து கழக உறுப்பினா் மீனாட்சிசுந்தரம் வரவேற்றாா். தலைவா் மணிசங்கா் நன்றி கூறினாா்.