உடன்குடி அருகேயுள்ள கந்தபுரம் சத்குரு சாய்ராம் கோயில் 10ஆவது ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 6.30 மணிக்கு மகாகணபதி யாகம், 11 மணிக்கு மகா அபிஷேகம், மங்கள ஆரத்தி, கூட்டுப் பஜனை, பிற்பகல் 1 மணிக்கு பிரசாதம் வழங்கல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.