தேசிய பெண் குழந்தைகள் தின கருத்தரங்கு
By DIN | Published On : 09th February 2021 01:56 AM | Last Updated : 09th February 2021 01:56 AM | அ+அ அ- |

சமூக நலத் துறை மற்றும் மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் தேசிய பெண் குழந்தைகள் தின கருத்தரங்கம் ஆத்தூா் சி.சண்முகசுந்தரம் நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் ரஞ்சித் தலைமை வகித்தாா். ஆத்தூா் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளா் ஆா். ராஜம் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், பெண்கள் வள மைய அலுவலா் எஸ். வீரம்மாள் கலந்துகொண்டு பேசினாா்.
போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி செலின் ஜாா்ஜ் பரிசுகள் வழங்கினாா். சமூக செயல்பாட்டாளா் இர.பு. தமிழ்குட்டி கருத்துரை வழங்கினாா்.
இயக்குநா் எஸ் ஜே. கென்னடி வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் எஸ். பானுமதி நன்றி கூறினாா்.