சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருச்செந்தூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

திருச்செந்தூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

வட்டார போக்குவத்து அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு வட்டார போக்குவரத்து அலுவலா் (பொறுப்பு) விநாயகம் தலைமை வகித்தாா். பேரணியை கோட்டாட்சியா் தி.தனப்ரியா கொடிசையத்து தொடங்கி வைத்தாா்.

காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் பங்கேற்றுப் பேசினாா். பேரணியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜசேகா், காவல் ஆய்வாளா் ஞானசேகரன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் வேல்முருகன், காவல்துறையினா், ஓட்டுநா் பயிற்சி பள்ளி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com